குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன்

ரக்‌ஷா பந்தன் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்வகையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்‌ஷா பந்தன் விழாவை கொண்டாடினார். பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள் மற்றும் பிற பணியாளர்களின் குழந்தைகள் பிரதமர் மோடியின் கையில் ராக்கி கயிறுகளை கட்டினர். இது தொடர்பாக வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியீட்டுள்ளது.