விரைவில் ஸ்கைபஸ் திட்டம்

பாரதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் “ஸ்கைபஸ்” எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். “மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கை பஸ்களை தொடங்க விரும்புகிறோம். இது போக்குவரத்து இடையூறு மற்றும் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கும். டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இந்த சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரதத்தில் எரிபொருட்களின் இறக்குமதியை முற்றிலுமாக குறைப்பதே எனது கனவு” என தெரிவித்துள்ளார். ஸ்கைபஸ் என்பது மெட்ரோவைப் போலவே இருக்கும் ஒரு அமைப்பாகும், மின்சார சக்தியில் இயங்கும் ஸ்கைபஸ்கள் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியதாகும்.