12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி

நாட்டின் 75வது சுதந்திர தினம், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘வீடு தோறும் தேசியக்கொடி’ என்ற பிரசாரம் தேசிய அளவில் துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லடாக்கில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் நமது தேசியக்கொடியை ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியை கொண்டாடினர். ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.