அ.தி.மு.க கண்டனம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்புக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கெனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளார்.