பலனளிக்கும் நிர்வாக சீர்திருத்தங்கள்

கர்நாடக அரசும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையும் பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகம் குறித்த இரண்டு நாள் மண்டல மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர், “நல்ல நிர்வாகத்திற்கு குடிமக்களை, தொழில்முனைவோரை, அரசை நெருக்கமாக கொண்டு வருதல்” என்பதை இந்த மாநாடு மையப் பொருளாகக் கொண்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் உண்மையில் சாமானிய மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குதல், முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் என்ற நோக்கத்துடன் கடந்த 8 ஆண்டு காலத்தில் சமூக சீர்திருத்தங்களாக இருக்கின்றன. ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தேசிய ஆள்சேர்ப்பு முகமை, அரசிதழ் பதிவுபெறாத பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு கணினி அடிப்படையில் பொது தகுதித் தேர்வை இந்த ஆண்டு இறுதிவாக்கில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 12 மொழிகளில் நடத்தப்படும் இந்தத் தேர்வு படிப்படியாக அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் நடத்தப்படும்” என்றார்.