2024க்குள் 1 லட்சம் ஷாகாக்கள்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அனைத்து மாநில அளவிலான பிரசாரகர்கள் கூட்டம் (அகில் பாரதிய பிராந்த பிரசாரக் பைடக்) ஜூலை 7 முதல் 9 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே மற்றும் ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்த மூன்று நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2024ம் ஆண்டுக்குள் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஷாகாக்களின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்துவதற்கான இலக்கு மற்றும் நூற்றாண்டு விழா திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து தகவல் அளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரச்சார பிரமுகரான சுனில் அம்பேகர், “2025ல் ஆர்.எஸ்.எஸ் தனது 100வது ஆண்டு விழாவை கொண்டாடும். சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விரிவான விரிவாக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஷாகாக்கள் உருவாக்கப்பட வேண்டும், இதனால் சங்கப் பணிகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய வேண்டும். சமூக விழிப்புணர்வோடு சமூகத்தில் நேர்மறையான சூழலை உருவாக்குவதே இத்தகைய முயற்சியின் நோக்கமாகும். சங்கப் பணி மீண்டும் வேகம் பெற்றுள்ளது. கோவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட கிளைப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, ​​ஷாகாக்களின் எண்ணிக்கை 56,824″ என்று கூறினார்.