மிரட்டும் முதல்வர்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மீதான சதித் திட்ட வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு நாட்களுக்கு முன் என்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது, என்னுடைய வழக்கறிஞர் கிருஷ்ணராஜை திரும்பப் பெறுமாறு மிரட்டினர். எனக்கு உணவு அளிக்காமல் பட்டினி போட்டனர். இதுவும் ஒருவித மிரட்டல் தான். உண்மையை நான் வெளியே கொண்டு வர முயற்சிப்பதையடுத்து என் வாயை அடைக்க பல்வேறு விதங்களில் மிரட்டுகின்றனர். இதையெல்லாம் பினராயி விஜயன்ர் தன் மகளுக்காக செய்கிறார். மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களையும் அவர் தன் மகளாக நினைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.