கோயில் சொத்து கோயிலுக்குத்தான்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோயில் சொத்துக்கள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், பிறகு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘ தமிழகத்தில் லட்சக் கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றை மீட்க வேண்டும். கோயில் சொத்து கோயிலுக்கு தான். நாங்கள் நீண்ட நெடிய காலம் இருந்து வருகிறோம் அதனால் எங்களுக்கு சொந்தம்’ என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. 200 ஆண்டுகளோ 500 ஆண்டுகளோ யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. திருக்கோயிலின் மூலவர் எப்போதும் இளையவர் (மைனர்) ஆக கருதப்படுவார். அனைத்து கோயில் சொத்துக்களும் சட்டத்தின் பாரபட்சமின்றி மீட்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.