அரசியல் சாசன உரிமைகளைப் பறித்த காங்கிரஸ்

பாரதத்தில் 1975 ஜூன் 25ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபரூக்குதீன் அலி அகமது நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாகக் கூறி நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டது. 1977 மார்ச் மாதம் வரை சுமார் 19 மாதங்கள் இந்த அவசரநிலை நீடித்தது. நேற்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட 47வது நினைவுநாள். இதனையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில், “1975ல் இதே நாளில் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கான அரசியல் சாசன உரிமைகளைப் பறித்தது. அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை மிஞ்சியது. அவசரநிலைக்கு எதிராகப் போராடி நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுத்த தலைவர்களுக்காக நான் இன்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர்கள்தான் சர்வாதிகாரி மனப்பான்மையை தோற்கடித்தனர்” என்று பதிவிட்டுள்ளார்.