ராணுவ வீரர்களை தேடும் பணி

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மே 28ம் தேதி காணாமல் போனதாகக் கூறப்படும் இரு ராணுவ வீரர்களை தேடும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் மற்றும் சீன ஆக்கிரமிப்பு திபெத்துக்கு இடையேயான பாரத சீனா எல்லையில் அவர்கள் பணியில் இருந்தனர். கர்வால் ரைஃபிள்ஸ் பிரிவு வீரர்களான அவர்கள் அஞ்சாவ் மாவட்டத்தில் மிகவும் வேகமாக ஓடும் ஆற்றில் தற்செயலாக விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சீனா அவர்களைக் கடத்தியிருக்கலாம் என சமூக ஊடகங்களில் கூறப்பட்டாலும் இந்திய ராணுவம் அதனை உறுதிப்படுத்தவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு எல்லை கடத்தல் சம்பவங்களில் சீன ராணுவத்தின் ஈடுபாடும் அவர்களால் கடத்தப்பட்டவர்கள் பழங்குடியின வேட்டைக்காரர்கள் மற்றும் விறகு சேகரிப்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.