அலட்சியம் காட்டும் காவல்துறை

கோவை தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பகுதியில் உள்ள மேற்கு வங்க அல்லது சட்டவிரோத வங்கதேச முஸ்லிம்கள், ஆயுதங்களுடன் அங்குள்ள அன்பு என்ற ஹிந்து நபர் ஒருவர் வீட்டில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்து தட்டிக்கழித்தனர். இதனையடுத்து காவல்துறையை கண்டித்து இந்துமுன்னணி சாலை மறியலில் ஈடுபட்டது. அங்கு வந்த காவல்துறையினர் நாளை காலை 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். சொன்னபடி கைது செய்யவில்லை என்றால் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முற்றுகையிடப்படும் என்று சொன்னதையடுத்து நேற்று காலை 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.