தமிழுக்கு மோடி அளித்த மரியாதை

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள பாரத வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என பலரும் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அதில் ஒரு சிறுவன் தமிழில் ‛வணக்கம்’ என்ற பதாகை வைத்திருந்தான். இதனை கண்ட பிரதமர் மோடி, அச்சிறுவனின் வரவேற்பை ஏற்றார். அந்த பதாகையில் கையொப்பமிட்டு அவனை உற்சாகப்படுத்தினார். மேலும் அங்கு வந்திருந்த சிறுவர், சிறுமிகளுக்கு கை குலுக்கி உற்சாகப்படுத்தினார்.