இதுதான் உண்மை நோக்கமா?

 ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று பேசுகையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு மட்டும் தாய் இருக்கிறார் என எண்ணுவது தவறு. ராஜீவ் காந்தி கொல்லப்படும் போது போலீஸ் அதிகாரிகளும், மற்றவர்களும் கொல்லப்பட்டார்களே, அவர்களுக்கும் தாய், தந்தை, மனைவி குழந்தைகள் இல்லையா?’ என கேட்டார். பிறகு, ‘குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக்கூறி கோவையில் முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர். அவர்களை மட்டும் ஏன் விடுதலை செய்யவில்லை. முஸ்லிம்கள் என்பதற்காகவா? கோவை சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்யுங்கள்’ என்று பேசினார்.