பா.ஜ.க போராட்டம்

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான மாநில அரசில் நடைபெற்று வரும் ஆசிரியர் நியமன ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், மத ரீதியிலான ஆட்சேர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க எம்.பியும், பி.ஜே.ஒய்.எம் தேசியத் தலைவருமான தேஜஸ்வி சூர்யா, மாநில பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார் தலைமையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணி கருணாமொயீயிலிருந்து கொல்கத்தாவில் உள்ள பிகாஷ் பவன் நோக்கிச் சென்றது. இப்பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க தொண்டர்களை கலைக்க மேற்கு வங்க காவல்துறையினர் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அமைதியான பேரணியில் தேவையேயின்றி லத்திசார்ஜ் செய்யப்பட்டது. பெண் தொண்டர்களை ஆண் காவலர்கள் சிறிதும் இரக்கமின்றித் தாக்கினர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை பா.ஜ.க வன்மையாக கண்டித்துள்ளது.