தேவைப்பட்டால் எல்லையை தாண்டுவோம்

அசாம் மாநிலத்தை சேர்ந்த 1971 போரில் பங்கேற்ற ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விழா ஒன்றில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாரதத்திற்கு வெளியில் இருந்து ஆபத்து உருவானால் மீண்டும் நாங்கள் எல்லை தாண்டி வந்து தாக்க தயங்க மாட்டோம் என பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கிழக்கு எல்லையோரம் நிலவும் அமைதி பாரதத்தின் மேற்கு எல்லையோரம் நிலவவில்லை. கிழக்கு எல்லையோரம் பெருமளவில் ஊடுருவல்கள் குறைந்துள்ளது என கூறினார்.