அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்

ஒமைக்ரான் பரவல் காரணமாக, கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட தகுதி பெற்றவர்கள். அவர்கள், தனியார் மையங்களில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அரசு தடுப்பூசி மையங்களில், இலவசமாக போடப்படும் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் மற்றும் மேற்குறிப்பிட்டவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.