இனிமேல்தான் மோசமாகும்

உக்ரைன் ரஷ்யா போர் சூழல் தொடர்ந்து உக்கிரமாகி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் உடன் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த இம்மானுவேல் மெக்ரான், இந்தப் போரில் மோசமான சூழ்நிலை இனிமேல்தான் ஏற்படப்போகிறது. நாஜி ஆதரவாளர்களை உக்ரைனில் இருந்து விரட்ட புடின் எந்த எல்லைக்கும் செல்வார் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஷ்ய அணு ஆயுத பிரிவை தயார் நிலையில் வைக்கும்படி விளாடிமிர் புடின் ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.