டி.ஜி.பியிடம் கோரப்பட்ட விளக்கம்

கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பஜ்ரங் தள் உறுப்பினர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார். மேலும், அவர், இது குறித்த விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க கர்நாடக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்த குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5 வருடங்களாக குற்றப் பின்னணி கொண்ட இவர்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நகரில் இதுபோன்ற சமூக விரோதிகள் செயல்பட காவல்துறை உதவியதாக புகார் எழுந்துள்ளதே அதுகுறித்த விவரங்கள் என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகளும் அக்கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.