புத்தகம் வெளியீடு

சென்னை புத்தக கண்காட்சியில் மாநில அமைப்பாளர் க.பக்தன் அவர்கள் எழுதிய ‘நம்மை செதுக்கும் திருக்குறள்’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா விஜயபாரதம் பிரசுரம் அரங்கில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் புத்தகத்தை வெளியிட எல்.கே.எம் பப்ளிகேஷன் புவவேனஷ்வரி மற்றும் சாந்தி புத்தக நிலையம் சண்முகம் ஆகியோர் அதனை பெற்றுக்கொண்டனர். இதில் மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் மாநில செயலாளர் மனோகர் மாநகர் செய்தி தொடர்பாளர் பசுதாய் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.