மாரிதாஸ் வழக்கு ரத்து

மதுரையைச் சேர்ந்த தேசியவாதியான யூடியூபர் மாரிதாஸ் மீது தி.மு.க தூண்டுதலின் பேரில் காவல்துறையால் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கரோனா பரவல், பிபின் ராவத் குறித்து தொடுக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தால் முன்னரே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் தி.மு.க., சார்பில் நடத்த்டப்பட்ட கோலம் போடும் போராட்டத்தை விமர்சித்தார் என்பற்காக போடப்பட்ட வழக்கு மட்டும் நிலுவையில் இருந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.