திறமையை காட்டும் தேஜாஸ்

சிங்கப்பூரில் பிப்ரவரி 15 முதல் 18 வரை ‘சிங்கப்பூர் ஏர்ஷோ 2022’ நடைபெறுகிறது. இதில், பாரதத்தின் தயாரிப்பான லகு ரக போர் விமானம் (எல்.சி.ஏ) தேஜாஸ் பங்குகொண்டு தனது செயல் திறனை  வெளிப்படுத்த உள்ளது. இது உலகளாவிய தளத்தில் இந்திய விமானப் படையின் அற்புதத் திறன்களை பிரபலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான எக்ஸ்பீரியா, இந்த விமானக் காட்சியில், அமெரிக்க ராணுவம், இந்தோனேசிய ஏரோபாட்டிக் குழு, சிங்கப்பூர் விமானப்படை உள்ளிட்ட நான்கு விமானப்படைகள் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களின் எட்டு பறக்கும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சுமார் 600 நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.  இந்த கண்கவர் நிகழ்ச்சிகளை லைவ்ஸ்ட்ரீம் மூலம் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த துபாய் ஏர்ஷோவில் தேஜாஸ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.