மணல் கடத்திய பாதிரிகள்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க கிறிற்ஸ்தவ சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது.அதில், 2019 நவம்பர் முதல், கேரளபாதிரி மனுவேல் ஜார்ஜ், எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்தி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.எம் சாண்ட் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி, அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் இவர்களின் கும்பலால் கடத்தப்பட்டது.இது குறித்த உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை, பாதிரி மனுவேல் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்தது.எம்சாண்ட் நிறுவனத்திற்கு9.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த கடத்தலில் ஈடுபட்ட சமீர் என்பவர் கைது செய்யப்பட்டார்.அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு நெருங்கிய உறவினருமான சபீதா தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.மணல் கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.இதனிடையே இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.,விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட சாமுவேல் மார் இரோனஸ் உள்ளிட்ட,  ஐந்து கிறிஸ்தவ பாதிரிகளை கைது செய்தனர்.