காங்கிரஸ் இடைத்தரகர்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது ஆயுத இடை தரகராக இருந்தவர் சஞ்சய் பண்டாரி. இவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய நண்பர். இவர் பிரான்சின் டசால்ட் ராணுவ விமானத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ. 167 கோடி கமிஷன் பெற்றுள்ளார். அதில் டசால்ட் 90 கோடி பாக்கி வைத்துள்ளதாக வழக்கும் தொடர்ந்துள்ளார். இதேபோல, பல்வேறு ஆயுத மற்றும் விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இவர் 328 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளார் என்பது சமீபத்தில் கிடைத்த ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இவர் இப்போது பிரிட்டனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.