மிஷனரிகளின் கையில் தி.மு.க அரசு

பா.ஜ.க மூத்தத் தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ‘ஜெயம்கொண்டான் பகுதியில் உள்ள ரெட்டை பிள்ளையார் கோயிலுக்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது. தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, அந்த கோயிலை இடித்துத்தள்ளிவிட்டு கோயிலின் நிலங்களை ஒரு கிறிஸ்தவ மிஷனரிக்கு பட்டா போட்டுக் கொடுத்துள்ளது. முடிச்சூரில் சமீபத்தில் தி.மு.க அரசு இடித்துத் தள்ளிய ஆஞ்சனேயர் கோயில் விஷயத்திலும் இதுபோலவே நடந்துள்ளது. அந்த கோயிலின் பின் பகுதியில் கிறிஸ்தவ சர்ச் ஒன்று உள்ளது. கோயிலும் சர்ச்சும் பட்டாவுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், ஆஞ்சனேயர் கோயிலை இடித்துவிட்டு சர்ச்சுக்கு பட்டா கொடுத்துள்ளது தி.மு.க அரசு. இதிலிருந்தே இந்த அரசு எவ்வளவு மோசமாக, ஹிந்து விரோதமாக செயல்படுகிறது, கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலியாக செயல்படுகிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு உதாரணம்’ என தெரிவித்துள்ளார்.