விநாயகர் சிலை சேதம்

நீலகிரி மாவட்டம், கூடலுார் கீழ்நாடுகாணி வனப்பகுதியில் உள்ள வனவிநாயகர் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இச்சிலை, பல நுாற்றாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இச்சிலையின் பின்புறம், சிவன் யோக நிலையில் அமர்ந்துள்ளது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு கோவிலுக்கு ஆண்டுதோறும், ஜனவரி ஒன்று அன்று பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். வழக்கம்போல பக்தர்கள் சென்றபோது விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினரும் காவல்துறையினரும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இங்கு புதையல் இருப்பதாக கூறப்படுவதால் அதற்காக சேதப்படுத்தப்பட்டதா அல்லது மதவெறியர்களின் திட்டமிட்ட சதிச்செயலா இது என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.