முக்கிய குற்றவாளி கைது

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 23 அன்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர். இது சம்பந்தமாக பஞ்சாப் காவல்துறை நான்கு பேரைக் கைது செய்தது. இவர்களிடமிருந்து தோட்டாக்களுடன் எட்டு நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி ஜஸ்விந்தர் முல்தானி ஜெர்மனி தப்பிச் சென்றார். நமது மத்திய அரசின் வேண்டுகோளின் பேரில் ஜெர்மனி தப்பிச் சென்ற அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது. விசாரணையில் அவர் டெல்லி, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது என தெரியவந்தது. சீக் பார் ஜஸ்டிஸ் என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை நிறுவிய பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுவின் நெருங்கிய கூட்டாளி இவர். ஹர்தீப் சிங் நிஜ்ஜர், பரம்ஜித் சிங் பம்மா, சபி சிங், குல்வந்த் சிங் மோதடா உள்ளிட்ட பல காலிஸ்தானி தலைவர்களுடன் முல்தானி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்தியதாக இவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.