அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் டிசம்பர் 17ம் தேதி இரவு காலமானார். சிறந்த வழக்கறிஞரான இவர், துவக்கத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பின்னர் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் என பொறுப்புகள் ஏற்று ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஹிந்துக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் நேரிடையாக அப்பகுதிக்குச் சென்று உதவி புரிந்து வந்தவர். இவரது குடும்பம் முழுவதும் சங்கப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அன்னாரது மறைவு சங்க ஸ்வயம்சேவர்களுக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரது மறைவுக்கு நமது அஞ்சலிகள். தொடர்புக்கு ராஜேஷ் விவேகானந்தன் – 9840260631