போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூர் மாநிலம் மோரே என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அசாம் துணை ராணுவப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ பிரவுன் சுகர், 154 கிலோ ஐஸ் மெத் போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் மியான்மரில் வசிக்கிறார். அவரது கணவர் சீனாவை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. அவர்களை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.