டாடா சென்னை ஐ.ஐ.டி ஒப்பந்தம்

குறைந்த செலவிலான பசுமை எரிசக்தி தீர்வு உள்ளிட்ட வருங்கால தொழில்நுட்பங்களில் உயர் ஆராய்ச்சி பணிகளை கூட்டு சேர்ந்து மேற்கொள்ளும் வகையில் டாடா பவர் நிறுவனமும் சென்னை ஐ.ஐ.டியும் ஒரு ஒப்பந்தம் செயல்படுத்தியுள்ளது. மேலும், அங்கு எம்.டெக் பயிலும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் பணி வாய்ப்புகள் அளிப்பது தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, புதிய தொழில்நுட்பங்களில் டாடா பவர் நிறுவனமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து செயல்படும் என சென்னை ஐ.ஐடி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.