மாவோயிஸ்ட்டுகள் சரண்

சட்டீஸ்கர் மாநிலத்தின் தான்டேவாடா மாவட்டத்தில் 16 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் காவல்துறையினர் முன்பு சரணடைந்து உள்ளனர். அம்மாநில காவல்துறையின் மறுவாழ்வு திட்டமான ‘லோன் வரது’வின் கீழ் அவர்கள் சரண் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சட்ட விதிகளின்படி மறுவாழ்வு அமைத்து கொடுக்கப்படும். சரண் அடைந்த 16 மாவோயிஸ்டுகளில் ஒருவரான ஜோகா குன்ஜம் ஏற்கனவே பல்வேறு தாக்குதல் வழக்குகளில் தொடர்படையவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லோன் வரது’ திட்டத்தின் கீழ் இதுவரை 475 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்து உள்ளனர்.