சாதனை புரியும் ஜன் தன்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத், மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், கொரோனா ஊரடங்கிற்கு முன்பு 25.03.2020 அன்றைய நிலவரப்படி, 38.33 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் ரூ. 1,18,434 கோடி முதலீட்டுக் கையிருப்பாக இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, 10.11.2021 நிலவரப்படி, கணக்குகளின் எண்ணிக்கை 43.85 கோடியாகவும், முதலீட்டுக் கையிருப்பு ரூ. 1,48,069 கோடியாகவும் அதிகரித்துள்ளது’ என தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில்,  சிறு, குறு விவசாயிகள், ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதில், மண்டல கிராமிய வங்கிகள் இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ளன’ என தெரிவித்தார்.