ஆதார் ஹேக்கத்தான் 2021

பாரதத்தின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தொழில்நுட்பத் துறையில் புதுமைகளைக் கொண்டாட, சேவை விநியோகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த “ஆதார் ஹேக்கத்தான் 2021” என்ற தலைப்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி ஒன்றை இந்திய பிரதேயேக அடையாள ஆணையமான ‘உடாய்’ நடத்துகிறது. வரும் அக்டோபர் 28 முதல் 31வரை ஹேக்கத்தான் போட்டிகள் நடைபெறும். இவை, பதிவு மற்றும் புதுப்பித்தல் என்ற தலைப்பிலும் அடையாளம் மற்றும் அங்கீகாரம் என்ற மற்றொரு தலைப்பிலும் இரண்டு வகைகளில் நடத்தப்படும். வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுடன் பல்வேறு ஊக்க சலுகைகளும் கிடைக்கும். இளைஞர்கள் குழுக்களாக இதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். https://hackathon.uidai.gov.in/ என்ற இணைய முகவரியில் நிகழ்ச்சி குறித்த விரிவன தகவல்கள், ஆன்லைன் பதிவு தகவல்களை பெறலாம்.