சேவையே வேள்வி

சேவாபாரதி தமிழ்நாடு சார்பில் கடந்த 29.8.2021ல் நடைபெற்ற பெரியோர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ‘சேவையே வேள்வி’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை காலக்கட்டத்தில் சேவாபாரதி தமிழ்நாடு செய்த சேவைப் பணிகள் சம்பந்தமான விவரங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத பிரச்சாரகர்  செந்தில்குமார் வெளியிட சேவாபாரதியின் சென்னை மாநகர பொருளாளர் சங்கர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், சேவாபாரதியை சேர்ந்த பல்வேறு முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.