சோம்நாத் கோவிலுக்கு அடிக்கல்

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள சிவபார்வதி கோவில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் சலத்ஸ் முறையில் கட்டப்பட உள்ளது. அதற்கு பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் சோம்நாத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களில் சோம்நாத் ப்ரோமெனேட், சோமநாத் கண்காட்சி மையம், பார்வதி கோவில் மற்றும் பழைய சோமநாத்தின் புனரமைக்கப்பட்ட கோவில் வளாகம் ஆகியவையும் அடங்கும். அதில் பேசிய பிரதமர் மோடி, ‘ஆன்மீக சுற்றுலாவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் கடந்த காலத்தைப் பற்றிய அறிவை இளைஞர்கள் அறிந்து கொள்வார்கள். பயத்தால் நம்பிக்கையை ஒடுக்க முடியாது என்பதை கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாரதத்தின் ஒருங்கிணைப்பு இயக்கம் (Bharat jodo andolan) பற்றி பேசும்போது, அது வெறும் புவியியல், கருத்தியல் தொடர்பு பற்றியது அல்ல. அது, நமது வரலாற்றின் பாரம்பரியத்துடன் ஒரு புதிய பாரதத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி. நமது புதிய பாரதத்தின் வலுவான தூணாக ராமர் கோவில் உருவாக்கப்பட்டு வருகிறது.’ என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, குஜராத் முதலமைச்சர்  விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.