சமாஜ்வாடி பேரணியில் பாகிஸ்தான் கோஷம்

சமஜ்வாடி கட்சி, ஆக்ராவில் ஏற்பாடு செய்த கட்சி பேரணியின் போது சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள், பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ உள்ளிட்ட பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு பா.ஜ.க, ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் உள்ளிட்ட கட்சிகளும், ஹிந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் ஆக்ரா மாவட்டத் தலைவர் வாஜித் நிசார், பேரணியின் போது பாகிஸ்தான் சார்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதை ஒப்புக்கொண்டார். கட்சியின் பிம்பத்தை கேவலப்படுத்த சிலர் இப்படி செயல்படுவதாக குற்றம் சாட்டினார். பங்கஜ் சிங் என்ற நபர் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை அவர் மறுத்துள்ளார். தொடர்ந்து உ.பியில் அல்குவைதா பயங்கரவாதிகள் சிக்கி வரும் நிலையில் இது போன்ற கோஷங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது. உ.பி காவல்துறையும் இது குறித்து விசாரித்து வருகிறது.