சி.பி.ஐ சோதனை

திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் தனியார் வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். அவரது அலுவலகத்தில் அதிக அளவில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், கொக்கிரக்குளம் வசந்த நகரில் உள்ள ஜாகீர்உசேனின் வீடு மற்றும் திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள அவரது வாடகை கார் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.