பட்டியலினத்தவரை தாக்கிய முஸ்லிம்கள்

ராஜஸ்தான், ஜலாவரைச் சேர்ந்த கிருஷ்ணா வால்மீகி என்ற பட்டியலின இளைஞனை, சாகர் குரேஷி, ரெய்ஸ், இம்ரான், அக்தர் அலி, சோஹைல், சாஹித் உள்ளிட்ட 12 முஸ்லிம்கள் இணைந்து மரக்கட்டைகளால் தாக்கிக் கொன்றனர். அவர் காரில் இருந்து இழுக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பகை, பழிவாங்கல் நடவடிக்கை மட்டுமே காரணம். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.