தெரசா அறக்கட்டளை இயக்குனர் கைது

அன்னை தெரசா நல அறக்கட்டளையின் அனாதை இல்லத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக அனாதை இல்லத்தின் இயக்குனர் ஹர்பால் சிங் தாப்பர், அவர் மனைவி புஷ்பா ராணி, அவரது மகன் மற்றும் வார்டன் கைது செய்யப்பட்டனர். புஷ்பா ராணி, டிர்கி கிழக்கு சிங்பூம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் (சி.டபிள்யூ.சி) தலைவராகவும் இருந்தார். இரண்டு மைனர் சிறுமிகள் காணாமல் போனது சம்பந்தமான புகாரை காவல்துறை விசாரித்தபோது இந்த கொடூரமான விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.