சொந்த அமைப்பினர் மீதே குண்டு வீச்சு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பு, அது நிறுவப்பட்ட நாளிலிருந்தே, எப்போதும் மோசமான செய்கைகளுக்காக மட்டுமே செய்திகளில் வந்துள்ளது. அவற்றில் ஒன்று, சமீபத்தியவை கேரளாவின் பாதாம் வனப்பகுதியில் 200க்கும் அதிகமானோருக்கு ஆயுத பயிற்சி அளித்தது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வரும் வேளையில், அதே பாதாம் வனப்பகுதிக்கு அருகே தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பி.எஃப்.ஐ – எஸ்.டி.பி.ஐ கும்பல்களுக்கு இடையே உள்ள சில நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகராறுகளால், பைசல் ராஜ் தலைமையிலான கும்பல், சுல்பிகர், நைசாம்  அகியோர் மீது வெடிகுண்டுகளை வீசியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.