வதந்திகளை நம்ப வேண்டாம் – டெல்லி போலிஸ்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 4 நாட்களாக நீடித்த வன்முறையில், 46 பேர் பலியாகினர்.  தற்போது டெல்லியில் அமைதியானா நிலை நிலவுகிறது.
போலீஸ் பாதுகாப்புக்கிடையே, பொதுமக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், நம்பிக்கை ஏற்படுத்த உள்ளூர் மக்களுடன் பேசி வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். வதந்திகள் பரப்பிய சில நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.