80 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட ஹிந்து

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் மௌகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் அமைந்திருக்கும் சுய்யா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் கிரி. 21 வயதான இவர், வனத்துறையில் மரக்கன்றுகள் நடும் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். இவருடன் துத்தாமுனியா பகுதியைச் சேர்ந்த யூனுஸ் அன்சாரி என்பவர் இந்த பணியில் கூட்டாளியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி வேலை விஷயமாக வெளியில் செல்வதாகக் கூறிச் சென்ற விகாஸ் கிரி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, விகாஸ் கிரியின் தந்தை, மகனை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகாரளித்தார். காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தும் விகாஸ் கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் துத்தாமுனியா வனப்பகுதிக்கு ஆடு, மாடுகள் மேய்க்கச் சென்றவர்கள், அங்கு எலும்புக் கூடுகள் கிடப்பதை பார்த்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று காவலர்கள் நடத்திய விசாரணையில், அங்கு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருப்பது விகாஸ் கிரி என்பதை கண்டறிந்தனர். அருகில் விகாஸ் கிரியின் ஆதார் அட்டை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதனால், சந்தேகத்தின் பேரில் விகாஸ் கிரியின் கூட்டாளி யூனுஸ் அன்சாரியிடம் விசாரித்தனர். அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், யூனுஸ் அன்சாரியின் சகோதரி ஒருவருடன் விகாஸ் கிரி அடிக்கடி ஊர் சுற்றி வந்த தகவலை கிராம மக்கள் மூலம் அறிந்தனர். இதையடுத்து, கடந்த 14ம் தேதி யூனுஸ் அன்சாரியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விகாசை தான் கொலை செய்ததை யூனுஸ் ஒப்புக்கொண்டார். யூனுஸ் அன்சாரியின் மூன்று சகோதரிகளில் ஒருவர் விகாஸ் கிரி மீது காதல் கொண்டிருந்தார். இருவரும் அடிக்கடி துத்தாமுனியா காட்டுப் பகுதியில் சந்தித்டு வந்தனர். கடந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி, தனது சகோதரியுன் கிரி இருப்பதை யூனுஸ் அன்சாரி பார்த்துவிட்டார். இதையடுத்து, தனது மைத்துனர் சிர்தாஜ் முகமதுவுடன் சேர்ந்து விகாஸ் கிரியை இரும்பு ராடால் தாக்கிக் கொன்றார். பின்னர், விகாஸ் கிரியின் உடலை 80 சிறிய துண்டுகளாக வெட்டி, கோணிப்பையில் போட்டு தூக்கிச் சென்று துத்தாமுனியா காட்டுப் பகுதியில் வீசியுள்ளார் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்து யூனுஸ் அன்சாரியை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சிர்தாஜ் முகமதுவை தேடி வருகின்றனர். சமீபத்தில்தான், டெல்லியில் ஷ்ரத்தா என்கிற ஹிந்து பெண் தனது முஸ்ளிம் காதலனான ஆப்தாப் என்பவனால் லவ் ஜிஹாத் வலையில் வீழ்த்தப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், தற்போது ஒரு ஹிந்து நபர், தனது முஸ்லிம் நண்பனால் 80 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.