ஹிந்து முன்னணி புகார் மனு

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலை மறைத்து, ஹிந்து பக்தர்களை தரிசனம் செய்ய விடாமல் தடுத்து, அத்துமீறி மேடைபோட்டு ஹிஜாப் போராட்டம் நடத்திய முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் மீது  வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்த இணையதளவாசிகள், இதே ஒரு மசூதி முன்போ அல்லது சர்ச் முன்போ ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினால் அவர்களோ அல்லது காவல்துறையியோனரோ சும்மா இருப்பார்களா? ஹிந்துக்கள் என்றால் மட்டும் இலக்காரமா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், நமது தேசியக்கொடியை ஹிஜாப் போல அணிந்து தேசியக்கொடியின் புனிதத்தை களங்கப்படுத்தினர் என்பதும் நினைவுகூரத்தக்கது.