விடுதலையில் விஜயபாரதம் – விஜயபாரததிற்கு விளம்பரம் செய்யும் கி.வீரமணி

                                                                         ‘தீபாவளி மலர்’ என்ன கூறுகிறது?

ஆரியக் கூத்தாடிகளை ரசித்தாலும் கூட காரியத்தில் கண்ணாயிருப்பார்கள் பெரியார் மண்ணின் மைந்தர்கள் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். ஏடு தனது தொடர்ந்து ஒப்பாரி – அழுகுரலில் அதன் தீபாவளி மலர் (25.10.2019) தலையங்கத்தில் உள்ளதே, நாம் பதில் கூறுவதற்கு அவசியமற்றதாக்கி விட்டது.

இதோ அதன் ஆதங்கம் – பாரீர்!

‘‘தமிழ்நாட்டில் ஒரு கும்பல் தொடர்ந்து ஹிந்து விரோத பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்; இவர்களின் பிரச்சாரத்திற்கும் பிறகும்கூட,  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய ஒரு கோடி பக்தர்கள் திரண்டனர் என்றால், தமிழ்நாடு எப்போதும் ஆன்மிகத்தின் பக்கம் என்பதை நிரூபித்திருக்கிறது.

ஹிந்துக்கள் கோவிலுக்குப் போவது மட்டுமல்லாமல், ஓட்டுப் போடச் சொல்லும்போதும், ஹிந்துவாக வாக்கு அளிக்க வேண்டும்; ஹிந்து விரோத தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களுக்கு ஹிந்துக்கள் வாக்களிக்க மாட்டோம் என்று இந்தத் தீபாவளி நன்னாளில் சபதம் ஏற்போம்” என்று ஓலமிடுகிறது.