வாலாட்டும் பாகிஸ்தான்- இந்திய ராணுவம் எச்சரிக்கை

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து, நம்எல்லைக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து, விஷம செயல்களை அரங்கேற்ற, பாக்., ராணுவம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.பாக்., ராணுவத்தின் இந்த விஷமச் செயலுக்கு, நம் வீரர்கள், தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இரண்டு நாட்களாக, ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலமும், பயங்கரவாதிகளும், பாக்., ராணுவத்தினரும், தவறான கருத்துகளை பகிர்ந்து,ஜம்மு – காஷ்மீர் மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.பொதுமக்கள், அவர்கள் விரிக்கும் மாய வலையில் விழுந்து விட வேண்டாம்.பாகிஸ்தான் ராணுவம், தன் விஷமச் செயலை தொடர்ந்தால், அதற்கு, இந்திய வீரர்கள், கடுமையான பதிலடி கொடுப்பர் என்பதை உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறேன் என்று இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய கமாண்டர், ரன்பீர் சிங் கூறினார்.