வண்ணாரப்பேட்டையும் ஷாகின் பாகும்

”ஸ்கில் டெவலப் மெண்ட் புரோக்ராம்” என்று மோடி அரசினால் கொண்டு வரப்பட்ட திறன் மேம்பாட்டுத்  திட்டம், கழைக்கூத்து நடத்தும் குடும்பத்துக்  குழந்தையை உலக  ஜிம்னாஸ்டிக்கில் வெற்றி பெறும் நுட்பம் சொல்லி கொடுப்பது தான் என்ற புதுமை வரவேற்கத்தக்கதே.

தொழிற்சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொழிலாளிகள், கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் என்று எந்த துறையினராக இருந்தாலும் அவர்களது திறனை மேம்படுத்தி 100 சதவீதம் திறனை வெளிக்கொண்டுவரும் திட்டம் இது. நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையானது. வரவேற்கிறோம். அரசியலிலும் தற்போது வெற்றிகளை குவிக்க சில புள்ளிகள் தோன்றி இருக்கிறார்கள். இவர்கள் கட்சிகளின் திட்டம், கொள்கைத் திறனை மேம்படுத்துவதோ தொண்டர் திறனை வளர்ப்பதோ அல்ல. குறுக்க வழியில் வெற்றி குவிக்கு, சாய நீரை சாம்பாராக, சுண்ணாம்பு நீரை பாலாக காட்டி மக்களை ஏமாற்றும் யுக்திகளை வகுத்துக்கொடுக்கிறார்கள்.

அப்படித்தோன்றிய ஒரு எட்டப்பன் தான் பிரசாந்த் கிஷோர் என்கிற வடமாநில அறிவு வெம்பி. துரும்பை தூணாக்கி ஈரை ஈசனாக்கிக்கு, பேனை பெருமாளாக்கும் வல்லமை பெற்றவர் என கட்சிகளை நம்பவைத்தவர். எதை தின்றால் பித்தம் தெளியும், எதைச் செய்தால் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என துடியாய்த் துடிக்கும் திமுகவுக்கு தற்போது பெரும் தொகை பெற்று அட்வைசர் ஆகியுள்ளார்.

பாஜகவின் ஹெச்.ராஜாவை பார்ப்பன நாய் என தன் நெஞ்சத்திலிருந்து வஞ்சத்தைய ெல்லாம் கொட்டிதீர்த்த திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதியும் திமுக தலைவர் ஸ்டாலினும் தற்போது கூட்டு சேர்ந்திருப்பது, அவர்கள் மொழியில் சொல்வதானால், ஒரு வடநாட்டு    பார்ப்பன நாய் பிரசாந்த் கிஷோரிடம் தான்.  திமுகவின் மோதல் அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு தலைப்புக்குள் வருவோம். இந்த பிரசாந்த் கிஷோரின் சகுனி உபதேசம் தான் வண்ணாரப்பேட்டை சாலை அடைப்பு CAA எதிர்ப்பு போராட்டம்! தமிழ் நாட்டுக்கும் ஏன் இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லாத CAAவை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்! வண்ணாரப்பேட்டை காலவரையற்ற தர்ணா இவர்களுக்கு கை கொடுக்குமா, என்ற கேள்விகளுக்கான விடையை நாம் ஆரோய்வோம்.

வெறும் கையால் முழம் போடுவது வெறும் வாயை மெல்லுவது, நிழல் யுத்தம் செய்வது வண்ணாரப்பேட்டையில் தர்ணா நடத்துவது எல்லாம் ஒரே காரணத்திற்காகத்தான். ஆம், காரணமில்லா காரணத்திற்காக. ஆனாலும் அதற்குள்ளே புதைந்து கிடைப்பதை நாம் கண்டு பிடித்தாக வேண்டும். நாடு பிரிந்த 1947ல் நாடு பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு சொல்லப்பட்ட காரணம் மதரீதியாக நாங்கள் உங்களோடு சேர்ந்து வாழமுடியாது என்று முஸ்லிம் தலைவர்கள் சொன்னது தான். தற்போது CAA எதிர்ப்பின் மூலம் மற்றுமொரு பிரிவினைக்கு விதைவிதைக்க முயலுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் மூலம் அப்படி ஒரு நிலமை தோன்றும் என நான் நினைப்பது ரொம்ப அதீதம் என நீங்கள் சொல்வதும் என் காதில் விழுகிறது. அரசியலுக்காக அந்த எண்ணத்திற்கு காங்கிரசும் திமுகவும் பிரசாந்த் கிஷோரும் தூபம் போடுகிறார்கள் என்பது வெளிப்படையாகி வருகிறது. பாஜக தனது அறிக்கையில் சொல்லிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக  நிறைவேற்றி வருகிறது. முதலில் அரசியல் சாசனப்பிரிவு 370, அதற்கு பிறகு முத்தலாக்.  பிறகு NIA என்றாலும் இவைகளால் ஓட்டு வங்கி பாதிப்பு காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படவில்லை. CAA மூலம் மிகப்பெரிய ஓட்டுவங்கி பாதிப்பு இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்களை நாம் பார்ப்போம்.

2014 நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய அப்போதைய உள்துறை அமைச்சர் கிரண் ரஜுஜு, நம் நாட்டிற்குள் 2 கோடிக்கு மேல் வங்கதேச முஸ்லிம்கள் சட்ட விரோதமாக குடியேறி இருக்கிறார்கள் என தெரிவித்தார். தற்போது இந்த எண்ணிக்கை 6 கோடி பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக, திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் கூட 60,000லிருந்து இரண்டு லட்சம் பேர் வரை வங்கதேச அகதிகள் எந்த ஆவணமும் இல்லாமல் உள்ளுர் முஸ்லிம்களின் பாதுகாப்பில், ஆதரவில் வசித்து வருவதை தமிழக உளவுத்துறை உறுதி செய்துள்ளது.

இதில் பெரும் அச்சம் மற்றும் ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் அத்தனை பேரும் குடியுரிமை பெறாமல் வாக்குரிமை பெற்று தேர்தலில் வாக்களித்துள்ளனர். இவர்களின் இந்த வாக்கு வங்கி காலாவதியாகி, காணாமல் போய் விடும் என்கிற அச்சமே இன்றைய CAA எதிர்ப்பிற்கான பின்னணி. இப்போது புரிகிறதா வண்ணாரப்பேட்டை ரகசியம்? உலகின் எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லாமல் வாக்குரிமை மட்டும் பெற்றுவிடும் அவலம் இந்தியாவில் தான் உள்ளது. அதுவும் மதத்திற்காக நாடு கேட்டு பிரிந்து போனவர்கள் மீண்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் புகுந்து வந்து மீண்டும் தங்கள் பலத்தை தேர்தலில் காட்டி, மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிவகுக்கிறார்கள் என்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்கள் ஓட்டு வேண்டும்; அதுவும் சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கே விழும் என்பதால் இவர்களை ஆதரிக்கும் காங்கிரஸ், மம்தா, திமுக நாட்டிற்கு செய்வது பச்சை துரோகம். தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 5 லிருந்து 7 சதவீதம் தான். வண்ணாரப்பேட்டையில் நடக்கும் தொடர் தர்ணாவை முன்னின்று நடத்துவது எஸ்.டி.பி.ஐ என்ற முஸ்லிம் அமைப்பு.

ஆனாலும் அதற்கான துட்டு  திமுக தான் தருகிறது. இதில் பெரும் ஆபத்தான விஷயம், இதில் பங்கு பெறும் பெண்கள் போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதான். இதே முறையில்தான் காஷ்மீரிலும் பெண்கள் ராணுவத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். இவர்கள் அமைப்பு வலைப் பின்னலின் வீச்சு  எதுவரை உள்ளது என்பதைப் பாருங்கள்.

ஆக, 5 சதவீதம் மக்களை 95 சதவீதம் மக்கள் விழுங்கப் பார்க்கின்றனர். அதற்கு தேசவிரோத திமுகவும் பிரசாந்த் கிஷோரும் பக்கபலமாக இருக்கின்றனர். டெல்லியில் ஷாகின் பாக் உள்ளிருப்பு போராட்டத்தை தூண்டிய எஸ்.டி.பி.ஐ தனது வாக்குகளை முழுவதுமாக ‘ஆப்’ ஆட்சிக்கு அளித்து ஆட்சியில் அமர்த்தியது. அதுபோல வண்ணாரப்பேட்டை தர்ணாவும் திமுகவை ஆட்சியில் அமர்த் தாதா என பிரசாந்த் கிஷோர் கணக்குப்போடுகிறார்.

வண்ணாரப்பேட்டை முஸ்லிம் ரோடு மறியல் சென்னை மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இது தொடர்வது ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தி ஹிந்து ஓட்டுக்களை ஒருங்கிணைக்க வழிவகுக்கும். ஆனால் வண்ணாரப்பேட்டையும் ஷாகின் பாகும் 6 கோடி சட்டவிரோத வங்கதேச முஸ்லிம்களை இந்தியாவில் குடியமர்த்தும் உள்நோக்கம் கொண்டவை. பலிக்குமா பார்ப்போம்.