முக்கிய சதிகாரர் கைது

கேரள மாநிலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் சஞ்சித் கொலை வழக்கில் முக்கிய சதிகாரர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.டி.பி.ஐ பயங்கரவாதிகளால் கடந்த நவம்பர் 15ம் தேதி பாலக்காட்டில் பட்டப்பகலில் தன் மனைவியின் கண் முன்பாகவே சஞ்சித் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் காவல்துறை ஏற்கனவே சிலரை கைது செய்துள்ளது என்றபோதிலும், சம்பவம் நடந்து பல மாதங்களாகியும் அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறி வருகிறது. இதனையடுத்து சஞ்சித்தின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்நிலையில், கேரள மாநிலம் ஆலத்தூர் அரசு ஜி.எம்.எல்.பி பள்ளி ஆசிரியரும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கோட்ட தலைவருமான பாவா என்ற முக்கிய சதிகாரரை காவல்துறை இவ்வழக்கில் தற்போது கைது செய்துள்ளது. சஞ்சித் கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆதாரம்: https://vskbharat.com/main-conspirator-arrested-in-the-rss-swayamsevak-sanjiths-murder-case/?lang=en