பட்டினப் பிரவேசம் நடத்துவோம்

ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், ”சமய நெறிகளில் யாரும் அனுமதியளிக்க வேண்டியதில்லை. தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசத்தை கண்டிப்பாக நடத்தியே தீருவோம். ஆதினங்கள், மடாதிபதிகள், கோயில்கள் விஷயங்களில் யாரும் உள்ளே நுழைந்து இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது என கூற அதிகாரம் இல்லை. தருமபுரம் ஆதினம் பட்டணப்பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது. தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக நடக்கும் பட்டனப்பிரவேசம் என்பது சிஷ்யர்கள் தங்கள் குருவை கொண்டாடும் உற்சவம். நாங்கள் அந்த உற்சவத்தை கண்டிப்பாக நடத்தியே தீருவோம். இதுதொடர்பாக மடாதிபதிகள், ஆதினங்கள் கலந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம். கண்டிப்பாக தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டனப் பிரவேசம் நடத்த அனுமதி அளிக்கும். கொலை மிரட்டல் வந்தால் அரசிடம் பாதுகாப்பு கோரி மதுரை ஆதினம் முறையிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.