பின்வாங்கிய தி.மு.க

உலக புகழ் பெற்ற திருவாரூர் கோவிலின் தெற்கு ரத வீதிக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் முடிவை எதிர்த்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அதில் ஆளும் கட்சியின் அராஜக செயல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு வெளுத்து வாங்கினார் அண்ணாமலை. பொதுமக்கள் அதிக அளவில் திரண்ட இக்கூட்டம், பல்லாண்டு காலமாக இருந்து வரும் ரதவீதியின் பெயரை மாற்றி அதற்கு கருணாநிதியின் பெயரை வைப்பதா? என்ற மக்களின் கோபத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. இதை பார்த்து மிரண்டு போனது தி.மு.க அரசு. இதனையடுத்து, திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதை நிறுத்துவதாக திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, இதேபோல பட்டினப் பிரவேசம், பி.ஜி.ஆர் எனர்ஜி, தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் கொள்முதல் என பல விஷயங்களில் தி.மு.க பின்வாங்கியது நினைவிருக்கலாம்.