பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பு

கொரோனா பொதுமுடக்கத்தால் இரண்டு மாதங்களுக்கு பின்னலா டைத் தொழில் பின்னடைவை சந்தித்தது. எனினும் மருத்துவ பாதுகாப்பு ஆடைகள், முகக்கவசங்கள் தயாரித்து, ஏற்றுமதி செய்து உலக அளவில் சாதனை படைத்தது. மத்திய அரசும் பல ஊக்க சலுகைகளை அளித்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு காரணமாக வெளிநாட்டு ஏற்றுமதி தயாரிப்பு உற்பத்தி 15% அதிகரித்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் காரணமாக, உள்நாட்டு தேவையும் அதிகரித்துள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். சீனாவின் மீதும் அதன் பொருட்கள் மீதும் உலக நாடுகள் நம்பிக்கை இழந்துள்ளன போன்ற காரணங்களால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.