பயங்கரவாதம் ஒரு தொழில்

kashmir-riotமுஸ்லிம்களே,  கீழே உள்ள தகவல் உங்களுக்காக.  உங்கள் நண்பர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.  காஷ்மீரில் 41 பேர் இறந்துள்ளார்கள், கலவரத்தில் ஈடுபட்டதால்.  இந்த 41 பெரும் முகவரி இல்லாதவர்கள். இவர்களை தூண்டிவிடும் பிரிவினைவாத தலைவர்கள் என்ன செகிறார்கள், அவர்களின் பிள்ளைகள் என்ன செகிறார்கள் என்று பார்ப்போம்.

போராட்டங்கள் எதிலும் பாரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா கலந்துகொள்வதில்லை.  முப்தி முஹம்மது சயீதின் மகள் மெஹபூபா முன்பெல்லாம் அறிக்கைகளாவது விட்டார்.  இப்போது நாடு முக்கியம் என்பதை உணர்ந்து நல்லாட்சி தருவது எப்படி என்று சிந்திக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் டெமாக்ரடிக் லிபேரேஷன் கட்சியின் தலைவர் ஜுனைத் குரேஷி கேட்கிறார், ‘ஜிஹாத் அவ்வளவு புனிதம் என்றால் பிரிவினைவாதம் பேசும் தலைவர்களின், பிள்ளைகள் ஏன் இதில் கலந்து கொள்வதில்லை’ என்று.  எல்லா பிரிவினைவாதிகளின் பிள்ளைகளும் படிப்பு, தொழில், வேலை என்று முன்னேற பார்க்கிறார்கள். சயீத் அலி ஷா கிலானி 86 வயதிலும் விடாமல் பிரிவினைவாதம் பேசிவருகிறார்.  இவரது பிள்ளைகள் என்ன செகிறார்கள் என்று பார்ப்போம்.

மூத்த மகன் நயீமும் அவன் மனைவி பாஜியாவும் பாகிஸ்தான் ராவல்பிண்டியில் மருத்துவம் பயில்கிறார்கள்.  அவரது இளைய மகன் டில்லியில் வசிக்கிறார்.  ஒரு மகள் பாராட் கிலானி, ஜெட்டாவில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அவரது கணவர் அங்கே பொறியாளராக இருக்கிறார்.  யாருக்கும் அவர் வழியை பின் தொடர விருப்பம் இல்லை.  அவரது பேரன், பேத்திகள் எல்லோரும் கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கிறார்கள்.  அவரது பங்காளி குலாம் நபி பால் லண்டனில் வசிக்கிறார்.  இவர்களுக்கு ஜிஹாத் போராட்டமெல்லாம் ஆபத்தாம்.

அப்போ இங்கே போராடுகிறவர்கள்?  சாகட்டும்!  இங்கே நாலு பிணம் விழுந்தால்தானே எங்களுக்கு இழவு?  எல்லாம் ஆயுள் ஆரோக்கியத்தோடு, அமைதியாக இருந்தால் எங்கள் பிழைப்பு நாங்கள் என்ன செய என்கிறார்கள்.

சரி இவர்கள்தான் இப்படி என்றால், கிலானியின் பிரிவினைவதை அமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளரான அயாஸ் அக்பரின் மகனான சர்வார் யாகூப் மும்பையில் நிர்வாகம் படிக்கிறார் (MBA).  இன்னொரு ஹுரியத் தலைவர் அப்துல் அஸீஸ் தரின்  ஒரு மகன் கணிப்பொறியாளர்.  இன்னொரு மகன் பால்வளத்துறையில் வேலை பார்க்கிறார். அந்திரபி என்பவர் ஈ மில்லத் அமைப்பின் தலைவி.  இவரது மகன் மலேசியாவில் தகவல் தொழில் நுட்பம் படிக்கிறார்.

இங்குள்ளவர்கள்?  இங்குள்ளவர்கள் உயிரை பணயம் வைத்துதானே இந்த கலவரமே?  இவர்களை முன்னிறுத்தி கலவரம் செது, அயயோ பாருங்கள் என்று சோன்னால்தானே, கல்லா கட்ட முடியும்?

முன்னேற வழியின்றி இருக்கும் முஸ்லிம்களை, முஸ்லிம்களே திசை திருப்பி சாக ஏற்பாடு செவார்கள்.  இவர்கள் இறந்தால் ஹிந்து மோடி அரசு கொன்றது என்று சோல்வார்கள்.

சபாஷ்!!  சபாஷ்!!